தனது ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது ரூ.12.3 கோடி நஷ்ட ஈடு கோரிய அமெரிக்க பெண்!!
தன்னை பழிவாங்க தனது முன்னாள் காதலன் வெளியிட்ட ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியம் அலி. அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இலினாய்ஸைச் சேர்ந்த ஆதீல் ஷா கான் என்பவருடன் பழகியுள்ளார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். பிரிந்த பிறகு கான் மரியமின் ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். அதுவும் மரியமின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள மரியம் அவற்றை அகற்றுமாறு பலமுறை ஃபேஸ்புக் நிறுவனத்தை கேட்டுள்ளார்.அப்படியும் அந்த புகைப்படங்களை ஃபேஸ்புக் அழிக்கவில்லை. இதையடுத்து அவர் புகைப்படங்களை அழிக்காத ஃபேஸ்புக் தனக்கு ரூ.12.3 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கான் தன்னை பழிவாங்கவே போலியாக தன்னை போன்ற உருவம் கொண்ட ஆபாச படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக மரியம் தெரிவித்துள்ளார். மரியமும், கானும் தங்கள் உறவில் சீரியஸாக இருந்தது இல்லை என்று மரியமின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Average Rating