காதல் விவகாரத்தில் மோதல்: வாலிபர் உள்பட 5 பேர் காயம்!!

Read Time:1 Minute, 26 Second

801d93b1-81f4-4935-98d0-7ef3a3b8ebb7_S_secvpfஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் வசிப்பவர் திருப்பதி மகன் மணிகண்டன்.

இருகுடும்பத்தினரிடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஏழுமலை தரப்பினர் ஆத்திரமடைந்தனர். அதையடுத்து ஏழுமலை உள்பட சிலர் மணிகண்டன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு மணிகண்டன் இல்லை. எனவே அங்கிருந்த அவரது உறவினர்கள் ராஜேந்திரன், மற்றொரு மணிகண்டன், பழனிவேல், ஞானமூர்த்தி, குணசேகரன், ஆகிய 5 பேரையும் தாக்கினர். பின்னர் தப்பி சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த வாலிபர் ராஜேந்திரன் உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதபற்றி உளுந்தூர்பேட்டை போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். அதன்பேரில் ஏழுமலை மற்றும் அவரது தரப்பை சேர்ந்த மணிமாறன், பரமசிவம், ஆகியோர் மீது சப்–இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம்பெண்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த பேஸ்புக்கில் அரைநிர்வாண போஸ்!!
Next post தனது ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது ரூ.12.3 கோடி நஷ்ட ஈடு கோரிய அமெரிக்க பெண்!!