கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
தஞ்சையை அடுத்த வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாற்றுதிறனாளியான இவருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அவர் சவேரியார் கோவில் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார். அவரது அக்காளும், கணவரும் வேலைக்கு சென்று விடுவதால் மீனா வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த தொழிலாளி. ஆரோக்கியதாஸ் (வயது 47), என்பவர் மீனா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அவரை கற்ப்பழித்து உள்ளார். அதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அவர் இதை தனது அக்காளிடம் சொல்ல பயந்து இருந்துள்ளார். அதை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கியதாஸ் அடிக்கடி அவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மீனாவிடம் சென்று தகாத முறையில் நடந்து வந்துள்ளார். இதுபோல் கடந்த 8 மாதங்களாக மீனாவை ஆரோக்கியதாஸ் கற்பழித்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனா வயிற்று வலி தாங்கமுடியாமல் கதறியுள்ளார். இதையடுத்து அவரது அக்காள் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து அவரது மீனாவிடம் கேட்டபோது அவர் செய்கை மூலம் ஆரோக்கியதாசை கூறியுள்ளார்.
இதுகுறித்து வல்லம் மகளிர் போலீசில் அவரது அக்காள், ஆரோக்கியதாஸ் மீது புகார் செய்தார். அதன்பேரில் வல்லம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மாற்று திறனாளி பெண்ணை கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating