நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை!!
வெளிநாட்டு வாழ் இந்தியரான பெண் ஒருவர், தன்னை ஆன்மிகம் என்ற பெயரில், நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெங்களூரு, ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, அவருக்கு, ராம்நகர் நீதிமன்றம், ´பிடிவாரண்ட்´ பிறப்பித்தது. இந்த பிடிவாரண்டை தள்ளுபடி செய்யுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு ஆண்மை பரிசோதனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று, உயர் நீதிமன்றம், நித்யானந்தா மனுவை, தள்ளுபடி செய்து, ஆக., 6ம் திகதி காலை 10:00 மணிக்கு, விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும்.
மேலும், நித்யானந்தாவுக்கு எதிராக ராம்நகர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்தது.
Average Rating