சமந்தா மிஸ் பண்ணுற விடயங்கள் என்ன தெரியுமா?
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் படத்தில் தான்.
அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்து வந்தார்.
இப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமான சமந்தா, அங்கேயே நிறைய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
தெலுங்கில் அதிக மார்க்கெட் இருப்பதால், சமந்தா தனது தலைமை அலுவலகத்தை ஆந்திராவிலேயே உருவாக்கிவிட்டார்.
இதையடுத்து சமந்தாவுக்கு சென்னை பிடிக்கவில்லை என்றொரு செய்தி மீடியாக்களில் பரவியிருக்கிறது.
இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். என்னுடைய தோழிகள் அனைவரும் சென்னையில் தான் இருக்கின்றனர்.
எனக்கு சென்னை ரொம்ப பிடிக்கும், ஆனால் சென்னை எனக்கு பிடிக்காது என்று பரவி வரும் செய்தி வேடிக்கையாக உள்ளது என்று சமந்தா கூறியுள்ளார்.
மேலும் சென்னையையும், எனது தோழிகளை அதிகமாக மிஸ் பண்ணுவதாகவும் கூறினார்
Average Rating