வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!
Read Time:54 Second
வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 4 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆண்டு டிசம்பர் தொடக்கம் 2014ஆம் ஆண்டு ஜனவரி வரையான காலப்பகுதியில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
Average Rating