வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!
கரூரை சேர்ந்த ராஜகோபாலலின் மகள் விஷ்ணுபிரியா (வயது 24). இவருக்கும் லிங்கேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வெள்ள கோவில் அருகே உள்ள செம்மை ரோட்டில் வசித்து வருகிறார்கள். திருமணமான 1 மாதம் வரை லிங்கேஸ்வரன் குடிக்காமல் இருந்தார். அதன்பின்னர் தினமும் குடித்து விட்டு தான் வீட்டுக்கு வருவார்.
மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கமே கிடையாது என்று கூறியதின் பேரில்தான் திருமணத்துக்கே சம்மதித்தேன் என்று குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு விஷ்ணுபிரியா கணவரிடம் கூறினார்.
ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாத லிங்கேஸ்வரன் குடிப்பதை நிறுத்த வில்லை. இதனால் மனம் உடைந்த விஷ்ணுபிரியா சம்பவத்தன்று அதிகளவில் தூக்க மாத்திரையை தின்றார்.
மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் விஷ்ணு பிரியாவின் தந்தை மகளை மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன்பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விஷ்ணு பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating