மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!
ஆலங்காயம் அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் வேலவன் இவர்களுடன் உள்ளார். கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேகர் வீட்டிலிருந்து வெளியே சென்றார். வீட்டில் கலைவாணி மட்டும் தனியாக இருந்தார். குடும்ப தகராறில் விரக்தியில் இருந்த கலைவாணி விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
வெளியில் சென்று திரும்பிய மகன் வேலவன் கலைவாணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவி இறந்த தகவல் கேட்டு சேகர் அதிர்ச்சி அடைந்தார். அவரும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating