குழந்தைகளுடன் தாய் மாயம்: கணவன் போலீசில் புகார்!!

Read Time:1 Minute, 57 Second

b576b768-e00d-4d1b-be3e-7fe378dc5ab5_S_secvpfபெரம்பலூர் அருகே வேப்பூர் கிராமத்தை தியாகராஜன் மகன் பாலாஜி (வயது 31) நிலத்தரகர் இவரது மனைவி கனிமொழி (வயது 25) கடந்த 22 ந்தேதி கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து பாலாஜியின் தம்பி மணிகண்டன், பாட்டி வாளாம்பாள் இருவரும் சமாதானபடுத்தி உள்ளனர். பின்னர் அன்று இரவு பாலாஜி வீட்டு மாடியில் தூங்க சென்று விட்டனர். மனைவி கனிமொழி மற்றும் மகன் கிருபாகரன் (வயது 4), மகள் கிருத்திகா (வயது 2) மூவரும் வீட்டில் உள்ளே தூங்கி கொண்டு இருந்தனர்.

பாலாஜியின் தம்பி மணிகண்டன், பாட்டி வாளாம்பாள் இருவரும் வீட்டு திண்னையில் படுத்து இருந்தனர். இந்நிலையில் காலை 6 மணிக்கு பாலாஜி வீட்டுக்கு கீழே வந்து பார்த்த போது மனைவி மற்றும் குழந்தைகள் காணாது கண்டு திடுக்கிட்டார். மூருவரும் வீட்டின் பின்பக்க கதவை திறந்து கொண்டு சென்றது தெரிய வந்தது.பின்னர் பாலாஜி மாமனார் வீடான கடலூர் மாவட்டம் விருதாசலம் வட்டம் ஊந்தங்கால் கிராமம் உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் குன்னம் போலீசில் பாலாஜி நேற்று மாலை புகார் செய்தார். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்கு பதிவு செய்து தாய் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!
Next post காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!