காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!
நிலக்கோட்டை அருகில் உள்ள மடப்பாறை கரட்டூரை சேர்ந்த பாண்டி மகள் பிரியா(17). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22).
இவர் கடந்த ஒரு மாதமாக பிரியாவை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி பிரியாவை தனியாக அழைத்து சென்று செக்ஸ் அனுபவித்தார். இதனால் பயந்துபோன பிரியா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
ஆனால் ரஞ்சித்குமார், திருமணத்திற்கு மறுத்ததுடன் அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் தன்னை காதலன் ஏமாற்றி விட்டாரே? என்று வேதனையில் பிரியா விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர்கள் சேர்த்தனர். விளாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில், மேற்குறித்த விபரங்கள் தெரியவந்தது.
இதனையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating