திருவள்ளூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!
திருவள்ளூர் ராம்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 4–ந்தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. கோவிந்தராஜ் தனது மகளை பல இடங்களில் தேடினார். கிடைக்கவில்லை.
இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவிந்தராஜ் நேற்று தேவி வேலை பார்த்த கம்பெனியில் போய் விசாரித்தார்.
அப்போது தேவிக்கும் போரூரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. தேவி, கார்த்திக்குடன் வீட்டிற்கு தெரியாமல் சென்று விட்டதும் தெரிய வந்தது. உடனே கோவிந்தராஜ் தனது மகளை கார்த்திக் கடத்தி சென்று விட்டதாக மீண்டும் செவ்வாய் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.
Average Rating