ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!
சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி முத்து வேல்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி (8). அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார்.
ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த வேலன்(27) செல்வத்தின் நண்பர். இவர் அடிக்கடி செல்வம் வீட்டுக்கு வருவார்.
சம்பவத்துன்று குடிபோதையில் அவரது வீட்டுக்கு சென்ற வேலன், செல்வத்தின் மகளை கடைக்கு அழைத்து சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் மகளும், வேலனும் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த செல்வம், மனைவி சாந்தியும், இருவரையும் தேடி சென்றனர். அப்போது அருகில் உள்ள கோயில் குளக்கரையில் சிறுமியின் அழுகை குரல் கேட்டது. சாந்தி அங்கு விரைந்து சென்று பார்த்தார்.
அப்போது வேலன் குழந்தையின் ஆடைகளை கழற்றிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை கண்ட சாந்தி அதிர்ச்சியடைந்தார். வேலனை பிடித்து தர்ம அடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து வேலனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Average Rating