கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
தனிமையில் வந்து சந்திக்கும்படி அந்த பெண்ணை கடந்த வெள்ளிக்கிழமை இர்பான் அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இர்பான், அந்த பெண்ணின் இருப்பிடத்தை தேடிச் சென்று, அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பித் தலைமறைவானார்.
எரிச்சல் தாங்க முடியாமல் அலறித் துடித்த அந்த பெண்ணின் கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். 30 சதவீத தீக்காயங்களுடன் அந்த பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை இந்த கதிக்கு ஆளாக்கிய இர்பானை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating