டெல்லியில் லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு!!
Read Time:1 Minute, 18 Second
வடமேற்கு டெல்லியில் பாலஸ்வா டெய்ரி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம் பெண் இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு கார் வந்து அவர் அருகே நின்றது. அதில் நிலபுரோக்கர் சதீஷ் மற்றும் நண்பர்கள் சஞ்சய், ஜீத்து ஆகியோர் இருந்தனர். அந்தப் பெண்ணுக்கு சதீஷை ஏற்கனவே தெரியும்.
அறிமுகமானவர் என்பதால் இளம் பெண்ணுக்கு சதீஷ் ‘லிப்ட்’ கொடுத்தார். அவரும் காரில் ஏறிக் கொண்டார். ஆனால், கார் சிறிது தூரம் சென்றதும் சதீஷ் அந்தப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார்.
கீதா காலணி அருகே வந்த போது அந்தப் பெண்ணை காரில் இருந்து வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். அதன்பிறகு அவர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார்.
போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சதீஷ், சஞ்சய், ஜீத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Average Rating