கற்பழிப்பு புகார்: உண்மையை கண்டறியும் சோதனைக்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு!!

Read Time:1 Minute, 24 Second

24மராட்டிய போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் மீது 25 வயது மாடல் அழகி ஒருவர் கற்பழிப்பு புகார் செய்தது பற்றி மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் புகார் கொடுத்த மாடல் அழகி ஆகிய இருவரிடமும் அறிவியல்பூர்வமான ‘பாலிகிராப்’ என்ற உண்மையை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இந்த சோதனையை நடத்த சம்பந்தப்பட்டவர்களிடம் சம்மதம் பெற வேண்டும் என்பதால், அவர்களிடம் போலீசார் ஒப்புதல் கோரி இருந்தனர்.

ஆனால் போலீஸ் டி.ஐ.ஜி. சுனில் பரஸ்கர் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே மாடல் அழகி கூறுகையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்து அதற்கான விண்ணப்பத்தில் நான் கையெழுத்திட்டு விட்டேன். ஆனால் அதற்கு போலீஸ் டி.ஐ.ஜி. மறுப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சி போட்டிக்கு தயாரான நடிகை!!
Next post திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!