திருச்சி உறையூரில் வாலிபர் மாயம்!!
Read Time:48 Second
திருச்சி உறையூர் சி.எஸ்.ஐ.குடியிருப்பில் வசித்து வருபவர் கனகரெத்தினம். இவரது மகன் ஜவஹர்லால் (வயது 24). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் உறவினர் வீடு உள்பட அந்த பகுதிகளில் தேடினர். எங்கு தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் கனகரெத்தினம் உறையூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான ஜவஹர்லாலை தேடி வருகிறார்கள்.
Average Rating