2-வது திருமணம் செய்து மிரட்டல்: மனைவியிடம் வரதட்சணை கொடுமை-கண்வர் கைது!!

Read Time:1 Minute, 30 Second

eee6e476-6b1b-4731-9a8b-d949e172549b_S_secvpfதிண்டுக்கல் அருகே மோளக்கவுண்டனூரையடுத்துள்ள மல்லபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ்(வயது25). அவரது மனைவி சத்யா(19). இவர்களுக்கு கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

தற்போது தலைப் பிரசவத்திற்காக சத்யா தாய்வீட்டிற்கு சென்றார். அப்போது ராமராஜூக்கும், மல்லபுரத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதனிடையே மனைவிக்கு தெரியாமல் அவரை ராமராஜ் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த விபரம் சத்யாவுக்கு தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த அவர் கணவரிடம் சென்று தட்டிக்கேட்டார்.

கோபம் கொண்ட ராமராஜ் உன்னுடன் குடும்பம் நடத்தவேண்டுமென்றால் 5 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் பணம் கொண்டுவர வேண்டும் என்று மிரட்டினார். இதற்கு உடந்தையாக ராமராஜீன் தந்தை பழனிச்சாமி, தாய் செல்வி, சகோதர்கள் வினோத், உறவினர் சுப்பம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதுகுறித்து வடமதுரை போலீசில் சத்யா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருப்புக்கோட்டை அருகே பெண்ணை ஏமாற்றி கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
Next post மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!