மைனர் பெண் பாலியல் பலாத்காரம்: 2 குழந்தைகளின் தந்தை கைது!!
Read Time:1 Minute, 18 Second
திருவண்ணாமலை நாவக்கரை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் எழிலரசி (வயது 17) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது).
அதே பகுதியை சேர்ந்தவர் பழனி(27), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடமாகிறது. மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். எழிலரசியும், பழனியும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 31ம் தேதி எழிலரசி அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த பழனி, எழிலரசியிடம் நைசாகபேசி ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எழிலரசி இதுகுறித்து தனது பெற்றோரிடம் பழனி தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.
Average Rating