வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!
வேட்டவலத்தில் கல்லூரி பணியாளர்களிடம் ரூ.4½ லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டு மாணவியுடன் கல்லூரி தலைவர் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் ஊழியர்கள் புகார்மனு கொடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலத்தில் டிப்ளமோ நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 34 பேர் படித்து வருகிறார்கள். இங்கு வேலை பார்க்கும் 9 பேரிடம் முதல்வர் பதவி மற்றும் இயக்குனர் பதவி தருவதாகக்கூறி கல்லூரி தலைவர் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.
சிலரிடம் தங்க நகைகளையும் வாங்கியிருக்கிறார். ஆனால் இதுவரை அவர்களுக்கு முக்கியமான பதவிகள் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதத் 4–ந் தேதி கல்லூரியில் படித்த ஒரு மாணவியுடன், கல்லூரி தலைவர் மாயமாகி விட்டார். இதனால் அங்கு படிக்கும் மாணவிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து நேற்று அனைத்து மாணவிகள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கல்லூரி தலைவர் மீது புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கல்லூரியில் வேலை பார்க்கும் 9 பேருக்கு முக்கிய பதவிகள் தருவதாககூறி தலா ரூ.50 ஆயிரமும், சிலரிடம் நகையையும் வாங்கி மோசடி செய்த கல்லூரி தலைவர் தற்போது ஒரு மாணவியுடன் தலைமறைவாகி விட்டார்.
இதனால் தற்போது கல்லூரி நடைபெறவில்லை. எனவே எங்கள் படிப்பு கேள்விக் குறியாக விட்டது. தங்கள் சான்றிதழ்களை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது தொடர்ந்து கல்லூரி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
புகார் மனு கொடுக்க கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் வந்திருந்தனர்.
Average Rating