மளிகை சாமான் வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

Read Time:3 Minute, 23 Second

06bdaffd-bcbe-48c9-9d63-f048be323e8e_S_secvpfகோவை பேரூர் காளாம் பாளையம் தீத்திபாளையம் ரோட்டில் உள்ள வேளாங்கண்ணி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ். நேற்று காலை வழக்கம்போல் கடை திறந்து வியாபாரம் செய்தார். அவரது மனைவி ஜெய்சுதா மதிய சாப்பிட கணவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு வியாபாரத்தை கவனித்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தவாறு 2 பேர் வந்தனர். ஒருவர் வண்டியிலேயே அமர்ந்திருந்தார். மற்றொருவர் இறங்கி மளிகைக்கடைக்கு வந்து குறிப்பிட்ட பொருள் வேண்டும் என்று கேட்டார். ஜெய்சுதா பொருளை எடுத்த தந்தார். தான் கேட்டது இந்த பொருள் இல்லை வேறு வேண்டும் என்று வாலிபர் கேட்டார்.

ஜெய்சுதாவின் கவனத்தை திருப்பிய வாலிபர் அவர் திரும்பியபோது ஜெய்சுதா கழுத்தில் அணிந்திருந்த 11 நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த ஜெய்சுதா அலறி சத்தம்போட்டார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்தவரோடு தப்பினார். ஜெய்சுதாவின் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். விபரம் அறிந்ததும் 5 மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்களை விரட்டினர். தீத்திபாளையம், பச்சாபாளையம், ராமபட்டிணம் ஆகிய பகுதிகளுக்கு விரட்டிச்சென்றனர். எனினும் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீசார் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இதேபோன்று வடவள்ளி பொம்மானம்பாளையத்தை சேர்ந்த கருப்பம்மாள் அங்குள்ள மளிகைக்கடைக்கு வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். திடீரென மளிகை கடையில் நின்ற கரும்பம்மாளை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். அதிர்ச்சிடைந்த கரும்பம்மமாள் சத்தம்போட்டார். அக்கம் பக்கதினர் திரண்டனர். கொள்ளையர்கள் கீழே தள்ளிவிட்ட அதிர்ச்சியில் மட்டுமே சத்தம்போட்டேன். கொள்ளையர்கள் இதைவிட அதிர்ச்சியடைவார்கள் எனெனில் அவர்கள் பறித்துச்சென்றது கவரிங் நகை தான் என்று கூலாக கூறினார். இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேட்டவலத்தில் மாணவியுடன் கல்லூரி தலைவர் மாயம்!!
Next post குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் ஓட்டம்!!