சிறுமிக்கு சூடு போட்டு சித்ரவதை: சித்தி மீது மகளிர் போலீசில் புகார்!!

Read Time:2 Minute, 25 Second

c7a20bb8-2c2c-47bf-8d6c-ae7eb8e8bb84_S_secvpfஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி மீது அவளது சித்தி ‘‘சூடு’ போட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34), கூலி தொழிலாளி. இவரது மனைவி மெகாதாஜ் பானு. இந்த தம்பதியினருக்கு ரகிமா பேகம் (10) என்ற மகளும் முகமது இப்ராகிம் (13) என்ற மகனும் உள்ளனர்.

சிறுமி பேகம் 5–ம் வகுப்பும் இப்ராகிம் 8–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கடந்த 10 மாதத்திற்கு முன் கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மெகாதாஜ் பானு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கூடலூரை சேர்ந்த தாஜ் தவலத் (27) என்ற பெண்ணை அப்துல் வகாப் 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

குழந்தைகள் 2 பேரையும் தாஜ் தவலத் நேர்த்தி கடன் செய்ய வேண்டும் என கூறி கூடலூருக்கு அழைத்து சென்றாராம்.

அங்கு வைத்து அவரும் அவரது தாயார் பான்பேபியும் சேர்ந்து குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்தார்களாம்.

உங்களால் தான் தகராறே வருகிறது என்று கூறி திட்டினர். மேலும் சிறுமி ரகிமாபேகம் உடல் மீது சித்தி தாஜ் தவலத் ‘சூடு’ போட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அப்துல் வகாப் கூடலூர் சென்று பிள்ளைகளை அழைத்து வந்தார். சூடு போட்ட சித்ரவதை செய்யப்பட்ட மகளை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

மேலும் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் அவர் புகார் செய்தார். மகளிர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: காதலன்– வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்!!
Next post வேலை கிடைக்காத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை!!