பெண்ணை கொன்று ரெயில் பாதையில் பிணம் வீச்சு: சைக்கோ வாலிபரின் 3–வது மனைவி சிக்கினர்!!
சேலம் அருகே ரெயில் பாதையில் பெண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை சேலம் ரெயில்வே போலீசாரும், வீராணம் போலீசாரும் மீட்டு விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில் அந்த பெண் சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த ரெஜினா என்றும், இவர் ரெயில் மோதி இறக்கவில்லை என்றும், இவரை யாரோ கொன்று பிணத்தை ரெயில்பாதையில் வீசி உள்ளனர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க சேலம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தனிப்படை அமைத்தார்.
இதில் உதவி கமிஷனர் முருகசாமி, அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் நாகராஜ், வீராணம் சப்–இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் இடம் பெற்று இருந்தனர். இவர்கள் விசாரித்து ரெஜினாவின் கணவர் ரமேஷ் என்பவரை தேடிவந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரமேசின் 3–வது மனைவி தங்கம் (வயது 32), சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த விமல்ராஜ், முள்ளு என்கிற விக்னேஸ் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர்களை தவிர மேலும் ஒரு வாலிபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீசாரால் தேடப்படும் ரமேசின் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது. இதுதவிர சிலை கடத்தல் வழக்கும் உள்ளது. இவர் ஏற்கனவே 2–வது மனைவியை கொன்று கைதானவர். தற்போது இவர் 3–வதாக சேலம் வீராணம் பள்ளிப்பட்டியை சேர்ந்த தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில வருடங்களாக முதல் மனைவி ரெஜினாவின் வீட்டிற்கு ரமேஷ் செல்வது இல்லை. இதனால் ரெஜினா, தங்கத்தின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். இதில் கோபம் அடைந்த தங்கம், ரெஜினாவை மிரட்ட ரமேசிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரமேஷ், ரெஜினாவிடம் சென்று ஆடி 18 பண்டிகைக்கு துணிமணிகள் எடுத்து தருவதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அவருடன் 4 பேர் இருந்துள்ளனர். காரில் செல்ல செல்ல ரெஜினாவை கயிற்றால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் உடலை சேலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியில் இருக்கும் ரெயில் பாதையில் வீசி தப்பி சென்றுள்ளனர்.
ரெஜினா கழுத்தை நெரித்துகொன்றது பிரேத பிரிசோதனை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் ரமேசை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு ஊர்களில் அவரை தேடி வருகிறார்கள். அவரை கைது செய்து விசாரித்தால் தான் ரெஜினா ஏன் கொலை செய்யப்பட்டார்? என தெரியவரும். இவர் கோர்ட்டுகளில் எங்கும் சரண் அடைந்துவிடாமல் இருக்க அனைத்து கோர்ட்டுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசாரால் தேடப்படும் ரமேஷ் சைக்கோ போல் செயல்பட்டு 2–வது மனைவியை கொன்றுள்ளார். இப்போது முதல் மனைவியை கொன்றுள்ளார். இவர் வேறு யாரையும் கொன்றுள்ளாரா? என்றும் விசாரணை நடக்கிறது.
Average Rating