குடும்பம் நடத்த வரமறுத்த மனைவிக்கு கத்திக்குத்து: கணவன் ஓட்டம்!!
Read Time:50 Second
அமைந்தகரையில் வசித்து வருபவர் ஏழுமலை. டிரைவர். இவரது மனைவி சல்மா (36). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சல்மா கொரட்டூர் பாலாஜிநகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு அடிக்கடி ஏழுமலை அழைத்தார். ஆனால் சல்மா கணவருடன் செல்ல மறுத்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சல்மாவை கத்தியால் குத்திவிட்டு ஏழுமலை தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Average Rating