ஆபாச படம் எடுத்து வாலிபர்கள் மிரட்டல் வழக்கில் கேரள அழகிகள் கைது!!
கேரளாவில் தொழில் அதிபர்கள், தனியார் கம்பெனி ஊழியர்கள், வசதி படைத்தவர்களை குறி வைத்து ஒரு கும்பல் செக்ஸ் வலையில் வீழ்த்தியது.
அவர்களது செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அந்த கும்பல் அழகிகளை விட்டு பேச செய்து ஆசை வார்த்தை கூறி அவர்களை மயக்கி லாட்ஜுகளுக்கு வரவழைத்து அவர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கும்போது அதை ரகசியமாக படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டியது.
இந்த கும்பலுக்கு பயந்து ஏராளமானவர்கள் கோடிக் கணக்கில் பணத்தை இழந்து உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாற மூடைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவீந்திரன் என்பவர் இந்த செக்ஸ் வலையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டார்.
இதன் பிறகு இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்தது. இந்த கும்பலின் தலைவனான ஜெயச்சந்திரன் மற்றும் அழகிகள் ருச்சனா, பிந்தியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு பிறகு நேற்று அழகிகள் ருச்சனா, பிந்தியா ஆகியோரை நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அதிகளவில் மக்கள் கூடி நின்றனர்.
அவர்கள் அழகிகள் மீது செருப்புகளை வீசி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். கூட்டத்தினர் நெருக்கி அடித்துக்கொண்டு அழகிகளை நெருங்கியதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதன் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அழகிகள் ருச்சனா, பிந்தியா ஆகியோரிடம் விசாரணை நடந்தது. அப்போது தொழில் அதிபர் ரவீந்திரனை ரூ.3 கோடி கேட்டு மிரட்டியதை அவர்கள் 2 பேரும் ஒப்புக் கொண்டனர். மேலும் விசாரணையின் போது, 2 முறை ருச்சனா மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையை தொடர்ந்து வருகிற 18–ந் தேதி வரை அவர்கள் இருவரையும் அட்டக்குளம் மகளிர் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டபோதும், அழகிகள் 2 பேரும் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். அப்போதும் ருச்சனா மயங்கினார்.
இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அழகிகள் 2 பேருக்கும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. * * * அழகிகளை காண கோர்ட்டு வளாகத்தில் திரண்ட பொதுமக்கள். * * * கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய ருச்சனா. * * * அழகிகள் ருச்சனா, பிந்தியா ஆகியோரை போலீசார் நெடுமங்காடு கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற காட்சி.
Average Rating