காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மாணவி தற்கொலை முயற்சி!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்வடமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் அயன்வடமலாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். செந்தில்குமார் அவ்வப்போது காதலியிடம் நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி உல்லாசம் அனுப்பவித்துள்ளார்.
இதனால் செல்வி 2 மாத கர்ப்பிணியானார். இந்த நிலையில் செந்தில்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த செல்வி அதிர்ச்சி அடைந்தார். காதலனை கரம்பிடிக்க முடியாமல் போனதால் விரக்தி அடைந்த அவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவரது பெற்றோர் மகள் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மகளை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாசார்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை ஏமாற்றிய செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணசாமி, தாய் கிருஷ்ணம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating