சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை: சித்தியை பிடித்து போலீசார் விசாரணை!!
ஈரோடு நாடார் மேட்டை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 34) தொழிலாளி. இவரது மனைவி மெகதாஜ் பானு (30). இவர்களுக்கு முகமது இப்ராகிம் (10), என்ற மகளும் மகிமா பேகம் (10) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மெகதாஜ் பானு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் குழந்தைகளை கவனித்து கொள்ளவும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரிலும் அப்துல் வகாப் தாஜ் தவுலத் என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்து கொண்டார். இவர் கூடலூர் அருகே உள்ள நடுவட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர்.
திருமணம் ஆகி 2 மாதங்கள் தாஜ் தவுலத் தனது கணவனுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினார். இதன் காரணமாக அவர் கர்ப்பம் அடைந்தார்.
இருப்பினும் தனது கணவர் முதல் மனைவியின் குழந்தைகளை அன்பாக கவனித்து கொள்வதை தாஜ் தவுலத்தால் பொறுத்துகொள்ள முடியவில்லை.
இந்த நிலையில் நேர்த்தி கடன் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு தாஜ் தவுலத் முகமது இப்ராகிம், மகிமாபேகத்தை அழைத்து கொண்டு ஏர்வாடி சென்றார்.
பிறகு அங்கிருந்து கூடலூர் நடுவட்டத்துக்கு அவர்களை அழைத்து சென்றார். அப்போது அப்துல் வகாப்பின் குழந்தைகளை அவர் அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமி மகிமா பேகத்துக்கு சூடுவைத்து கொடுமைப்படுத்தினாராம்.
இதைதொடர்ந்து அப்துல் வசாப் உடுமலை நடுவட்டத்துக்கு சென்று தனது மகன்–மகளை ஈரோட்டுக்கு அழைத்து வந்தார்.
இதைதொடர்ந்து மகிமா பேகம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
அப்துல்வகாப்பின் 2–வது மனைவி தாஜ் தவுலத்தையும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் ஜான் பேட்டியையும் நேற்று போலீசர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இன்றும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating