சேலம்: 8–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!!
Read Time:1 Minute, 7 Second
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகில் உள்ளது மேட்டுதானம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவரது மகள் கனகா(வயது 13– பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொளத்தூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி கொளத்தூரில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி வசிக்கும் பகுதியில் வசித்து வருபவர் தாமஸ் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கடந்த 31–ந்தேதி அதிகாலை மாணவியின் வீட்டுற்குள் புகுந்து மாணவியை பிடித்து பாலியல் தொல்லை செய்தார். இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். பின்னர் அவர்கள் இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசில் புகார் செய்தனர். இதை விசாரித்த போலீசார் தாமசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating