ஆபாசப்படம் காட்டியவருக்குத் தண்டம்!!
யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பொது இடத்தில் வைத்து தனது தொலைபேசியில் வைத்திருந்த ஆபாசப்படங்களை நண்பர்களுக்குக் காண்பித்த நபருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரம், புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.
மிருசுவில் பகுதியிலுள்ள பொது இடமொன்றில் செவ்வாய்க்கிழமை (05), மேற்படி நபர் ஆபாசப்படங்களை நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்த போது, சம்பவ இடத்தில் பொதுமக்கள் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கொடிகாமம் பொலிஸார் மேற்படி நபரைக் கைது செய்ததுடன், தொலைபேசியையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, மேற்படி நபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது நீதவான் தண்டம் விதித்ததுடன், ஆபாசப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி நினைவகத்தையும் (மெமறிசிப்) அழிக்கும்படியும் உத்தரவிட்டார்.
Average Rating