பிரேசிலில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் கொல்லும் மர்ம மனிதன்!!

Read Time:1 Minute, 27 Second

4579b6e8-237a-481d-9b94-b12d6db59b61_S_secvpfபிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரம் உள்ளது. இங்கு மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான்.

மோட்டார் சைக்கிளில் வரும் அவன் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விடுகிறான்.

கடந்த சில நாட்களாக அவனுடைய அட்டகாசம் கொயானியா நகரில் அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பெண்களை அவன் கொலை செய்துள்ளான். அவர்கள் 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்டவர்கள்.

கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமி ஒருவரை கொலை செய்துள்ளான். அடுத்த யாரை கொலை செய்யப்போகிறான் என தெரியாமல் பெண்கள் பீதியில் உள்ளனர்.

அவனை பிடிப்பதற்கு நகரம் முழுவதும் போலீசார் வலைவிரித்துள்ளனர். ஆனால் இதுவரை சிக்கவில்லை. ஒவ்வொரு பெண்ணை கொலை செய்யும்போதும், அவன் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வருவது தெரியவந்துள்ளது. இதனால் அவனை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!
Next post கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!