பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு!!

Read Time:1 Minute, 41 Second

a714b3a4-cee1-4fb2-b05f-1c8473012fd7_S_secvpfதூத்துக்குடி சுப்பையா லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீனியம்மாள்.

இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சில் ஏற முயன்றார்.

அப்போது கூட்ட நெரிசல் காணப்பட்டது. எனினும் சீனியம்மாள் முண்டியத்துக் கொண்டு பஸ்சில்ஏறி விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் தனது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.

இதுகுறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

சமீபகாலமாக தூத்துக்குடி பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எனவே போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அது மட்டும் நடந்தா – எப்படி இருக்கும்!!!
Next post ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!