மீரட் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்!!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23-ந்தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார்.
அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து உத்தரபிரதேச மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று விளக்கம் கேட்டுள்ளது.
Average Rating