3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!!
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமணமான ராஜேந்திர பிரகலாதராவ் வாஸ்னிக் (31), அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தான்.
பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று பாலியம் பலத்காரம் செய்தான். அத்துடன் சிறுமியை கொடூரமாக கொலை செய்தான். இந்தச் சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந்தேதி குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து குற்றவாளி வாஸ்னிக், இந்திய ஜனாபதிக்கு கருணை மனு அனுப்பினான். இந்த மனுவை கடந்த மாதம் 31-ந்தேதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனால் குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படலாம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 29 பேர் தொடர்புடைய கருணை மனுக்களில், 22 பேரின் தூக்குத்தண்டனைக்கும், ஒருவரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவும் பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்டுள்ளார்.
மும்பை தாக்குதல் தொடர்புடைய அஜ்மல், நாடாளுமன்ற தாக்குதல் தொடர்புடைய அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுவையும் நிராகாரித்து தூக்கு மேடைக்கு அனுப்பினார். கடந்த மாதத்தில் மட்டும் 5 கருணை மனுக்களை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating