ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!
தென் கொரியாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு சுற்றுலா முடிந்து புதுச்சேரியிலிருந்து யஸ்வந்தபூர் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்தார்.
அதே பெட்டியில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஆக வேலை செய்யும் ஊழியர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சித்தீஷ் (25) என்பவர் பெண்ணின் அருகில் அமர்ந்து பயணம் செய்தார்.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பெட்டியில் இருந்த அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சித்தீஷ், திடீரென அந்த வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அந்த வாலிபர் காட்பாடி வரும் வரை அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வந்தார். இதனால் வெறுப்படைந்த அந்த பெண் காட்பாடி ரெயில் நிலையத்தில் இறங்கி இதுகுறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தீஷை கைது செய்தனர்.
Average Rating