விபசார கும்பலிடம் சிக்கிய மாணவிகளை வேட்டையாடிய அரசியல் தலைவர்கள்!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 9–ம் வகுப்பு மற்றும் 8–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த மாதம் 11–ந் தேதி காணாமல் போனார்கள். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களிலும் தேடினார்கள்.
இரு மாணவிகளும் வடலூரில் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வரும் சதீஷ்குமார் (வயது 28) என்பவரிடம் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 2 மாணவிகளையும் மீட்டனர். சதீஷ்குமாரும் கைது செய்யப்பட்டார்.
மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மாணவிகள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் திட்டக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். அந்த தேவாலயத்தில் அருள்தாஸ் (60) என்பவர் மதபோதகராக இருந்து வந்தார்.
அவர் 2 மாணவிகளையும் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்து வந்துள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண் தெரிந்து கொண்டார். அவர் 2 மாணவிகளையும் மிரட்டி விபசார தொளிலில் ஈடுபடுத்தினார்.
பின்னர் 2 பேரையும் லட்சுமி விருத்தாசலத்தில் விபசார தொழில் நடத்திவந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு விற்றார். கலா அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண் ஜெமீனா என்பவரிடம் 2 பேரையும் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றார். பின்னர் ஜெமீனா வடலூரை சேர்ந்த சதீஷ் குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.
சதீஷ்குமார் 2 மாணவிகளையும் புதுவை, கடலூர், விழுப்புரம் என பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்து சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
மாணவிகள் 2 பேரையும் யார் யாருடன் விபசாரத்தில் ஈடுபடுத்தினார்கள் என போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் ஒரு பெண்ணிடம் சிக்கியிருந்த நேரத்தில் அரசியல் வாதிகள் பலரும் தங்களிடம் வந்து சென்றதாக அவர்கள் கூறினார்கள்.
எனவே மாணவிகளை வேட்டையாடிய அந்த அரசியல் தலைவர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவிகளை அரசியல் வாதிகளிடம் அனுப்பி வைத்த அந்த பெண் சொகுசுகார், பங்களா வீடு என வசதியாக வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது.
போலீசார் தற்போது சதீஷ்குமாருடன், லட்சுமி, கலா, ஜெமினா, மதபோதகர் அருள்தாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
Average Rating