காதலிக்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: பல்கலைக்கழக ஊழியர் கைது!!

Read Time:2 Minute, 52 Second

10b20883-c2d8-4418-999a-f00b0ddd7988_S_secvpfசிதம்பரம் அருகே தெற்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி இவரது மகள் சுபஸ்ரீ (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே கவரப்பட்டில் உள்ள தனது சித்தப்பா ஆனந்தராஜ் வீட்டில் வசித்து வந்தார்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக தினக்கூலி ஊழியர் ஸ்ரீதர் (28) என்பவர் ஆனந்தராஜ் வீட்டுக்கு அடிக்கடி சென்ற போது சுபஸ்ரீயிடம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக ஸ்ரீதரின் நடத்தை சரியிலில்லாதால் சுபஸ்ரீ ஸ்ரீதருடன் பழகுவதை நிறுத்தி கொண்டார். மேலும் ஸ்ரீதரை சந்திப்பதை சுபஸ்ரீ தவிர்த்து வந்தார். இதனால் சுபஸ்ரீ மீது ஸ்ரீதர் ஆத்திரம் அடைந்தார். நேற்று இரவு ஸ்ரீதர் குடிபோதையில் ஆனந்தராஜ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுபஸ்ரீயிடம் ஏன் இப்போது என்னை காதலிக்க மறுக்கிறாய் என்று கேட்டு ஸ்ரீதர் ரகளையில் ஈடுபட்டார். அதற்கு சுபஸ்ரீ தன்னை இனிமேல் மறந்துவிடு என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுபஸ்ரீயை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க முயன்ற சுபஸ்ரீயின் சித்தப்பா ஆனந்தராஜையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
Next post தியாகதுருகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 77 வயது முதியவர்!!