கொங்கணாபுரம் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

Read Time:1 Minute, 51 Second

25கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம் பச்சான் வளவு பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு வயல் வெளியில் நடந்து சென்றார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (60) என்ற முதியவர், பள்ளி மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது அவர் திடீரென அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு அழுது கொண்டே சென்று பெற்றோரிடம் போய் கூறினார். பின்னர் மாணவியின் தந்தை தனது மகளை அழைத்து கொண்டு காளியப்பனிடம் வந்து தட்டி கேட்டார்.

ஆத்திரம் அடைந்த காளியப்பனின் மூத்த மகன் ஹரிபுத்திரன், 2–வது மகன் செந்தில் ஆகியோர் சேர்ந்த மாணவியின் தந்தையை தாக்கினர். இதையடுத்து மாணவியின் தந்தை எடப்பாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் தலைமையில் போலீசார் விரைந்து சென்று காளியப்பன், மற்றும் அவரது 2 மகன்களையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட 3 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது!!
Next post சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!