15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!
Read Time:1 Minute, 6 Second
மாதம்பை – மெதகம பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்தே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமிக்கும் இராணுவ சிப்பாய்க்கும் இடையில் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பு இருந்ததாவும் அதனால் தான் குறித்த நபருடன் சென்றதாகவும் விசாரணைகளின் போது சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating