பள்ளி மாணவி காதலனுடன் ஓட்டம்: கடத்தல் வழக்கில் காதலன் கைது!!
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 10–ம் வகுப்பு மாணவி. இவரும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் அண்ணாமலையும் காதலித்து வந்தனர்.
இதற்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேவியை பெண் கேட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது தேவியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தேவியின் தந்தை ஊத்துக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் செங்குன்றம் அருகே உள்ள உறவினர் வீட்டில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்திருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் மீட்டு வந்தனர். பெற்றோருடன் செல்ல தேவி மறுத்து விட்டார். இதையடுத்து அவரை கெல்லீசில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தேவி மைனர் பெண் என்பதால் காதலன் அண்ணாமலை மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Average Rating