கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

Read Time:2 Minute, 0 Second

50b4bd20-6a3d-446a-a399-08877b0a5751_S_secvpfகொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டமங்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 25) இவர் சுக்காம்பட்டியை சேர்ந்த பஞ்சு என்பவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

பஞ்சுவின் மகள் கார்த்திகா (22) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் சதீசுக்கும் கார்த்திகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. பின்னர் அவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து கொட்டாம் பட்டி போலீசில், பஞ்சு புகார் செய்தார். அதில், எனது மகள் கார்த்திகாவை, சதீஷ் கடத்தி சென்று விட்டார். கடத்தப்பட்ட எனது மகளை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சதீஷ்–கார்த்திகா மாயமாகி ஓரு ஆண்டு ஆகி விட்டது. மகளை பற்றி எந்த தகவலும் தெரியாததால், பஞ்சு பல இடங்களில் தேடினார். இந்த விவரம் காதல் ஜோடிக்கு தெரிய வந்தது. அவர்கள் போலீசில் சரண் அடைய முடிவு செய்தனர்.

திருப்பூரில் பதுங்கி இருந்த சதீஷ்–கார்த்திகா அங்கிருந்து புறப்பட்டு கொட்டாம் பட்டி வந்தனர். இன்று காலை அவர்கள் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் பிரபாகர் விசாரணை நடத்தி சதீஷ்–கார்த்திகாவை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மகேந்திர பூபதி முன்பு ஆஜர்படுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!
Next post தண்ணீர் எடுக்க சென்றபோது ஊரணியில் தவறி விழுந்து பெண் சாவு!!