தண்ணீர் எடுக்க சென்றபோது ஊரணியில் தவறி விழுந்து பெண் சாவு!!

Read Time:1 Minute, 23 Second

c78fb038-3f09-4162-abd9-9ce20e161dfa_S_secvpfமானாமதுரை அருகே சிப்காட் போலீஸ் சரகத்தில் உள்ளது மல்லல் கிராமம். இங்கு ஊரணி ஒன்று உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த ஊரணிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.

நேற்று இரவு 7 மணி அளவில் வெள்ளைச்சாமி என்பவரது மனைவி மீனாள் (வயது55) என்பவர் தண்ணீர் எடுக்க ஊரணிக்கு சென்றார்.

அப்போது அவர் தவறி ஊரணிக்குள் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்தில் மீனாள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தண்ணீர் எடுக்க சென்ற மீனாள் வெகுநேரம் ஆகியும் திரும்பாததால் உறவினர்கள் ஊரணிக்கு சென்றனர்.

அங்கு ஊரணியில் மீனாள் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று ஊரணியில் மிதந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post கள்ளக்காதல் – மனைவியை வெட்டி வேக வைத்த கணவன்!!