மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!
தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுகுமார். கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் கணவர்–2 குழந்தையுடன் வசித்து வந்த ராதிகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தையுடன் ராதிகா, சுகுமாருடன் ஓட்டம் பிடித்தார். இருவரும் மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புருஷத்தில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி சுகுமார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில் சுகுமாரின் தந்தை பால்வண்ணன், மாமல்லபுரம் போலீசில் அளித்துள்ள புகாரில் சுகுமாரின் உடலில் காயங்கள் உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராதிகாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் காதலன் சுகுமாரை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
ராதிகா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
கடந்த 5–ந் தேதி எனக்கும், சுகுமாருக்கும் சண்டை ஏற்பட்டது. நான் அவரை கையாலும், கட்டையாலும் அடித்து தாக்கினேன். அவர் சுவற்றில் மோதி மயங்கி விழுந்தார். அவரை தூக்கில் கயிற்றில் மாட்டி தூக்கில் தொங்க விட்டேன்.
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்து, அக்கம் பக்கத்தினரிடம் சுகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்றும்படி கூறி வீட்டிற்குள் ஓடிவந்தேன்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் உடலில் உள்ள காயங்களை வைத்து போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர். இதில் நான் மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மேலும், கார் டிரைவர் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என்பது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating