திண்டுக்கல் அருகே மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு!!

Read Time:4 Minute, 0 Second

572f89ea-267f-4909-9b08-6d8db79ef911_S_secvpfதிண்டுக்கல் காமராஜபுரம் முனீஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(வயது48). இவர் கச்சேரிதெருவில் வெள்ளைப்பூண்டு மற்றும் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது 15வயது மகள் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கச்சேரிதெருவில் உள்ள பகுதியில் 10–வகுப்பு படித்து வருகிறார். தினமும் மதியம் வீட்டிற்கு சாப்பிட வரும்போது தனது தந்தைக்கு ராதா சாப்பாடு கொடுப்பது வழக்கம்.

கனகராஜ் கடை அருகே உள்ள மற்றொரு கடையில் அறந்தாங்கி கோட்டைப்பட்டிணம் மஞ்சள்கொடி கிராமத்தை சேர்ந்த அய்யனார்(23) என்பவர் வேலை பார்த்து வந்தார். தினமும் கடைக்கு வந்த ராதாவிடம் அய்யனார் ஆசையாக பேசி வந்துள்ளார். ராதாவும் ஏதார்த்தமாக பழகியதை தனக்கு சாதகமாக்கிகொண்ட அய்யனார் தனது காதல் சேட்டைகளை காட்டியுள்ளார்.

சம்பவத்தன்று தனது தந்தைக்கு சாப்பாடு கொடுக்க வந்த ராதாவை அய்யனார் திருச்சிக்கு கடத்திச்சென்றார். அதன்பிறகு தனது சொந்தஊரில் தனது உறவினர் ஒருவர் வீட்டில் வைத்து நாம் சில நாட்கள் கழித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறி அவரிடம் செக்ஸ் அனுபவித்தார். இவ்வாறாக நாட்கள் நகர்ந்தது. தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடிய கனகராஜ் பக்கத்துகடையில் வேலைபார்த்த அய்யனாரும் வேலைக்கு வராமல் போகவே சந்தேகமடைந்தார்.

அவரது வீட்டு விலாசத்தை கண்டுபிடித்து அறந்தாங்கி சென்றார். அங்கு தனது மகளையும், அய்யனாரையும் அழைத்து ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்டார். அதற்கு அய்யனார் உங்கள் மகளையே திருமணம் செய்துகொள்கிறேன், எங்களுக்குள் அனைத்தும் முடிந்துவிட்டது எனவே உங்கள் மகளுக்கு வேறு யாருடனும் திருமணம் செய்து வைக்கமுடியாது. 10 பவுன் நகை மற்றும் பணம் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த கனகராஜ் தற்போது உடனடியாக பணம்–நகை ஏற்பாடு செய்யமுடியாது. முதலில் திருமணம் செய்துகொள் என்றார். பிறகு தனது வீட்டிற்கு வந்த கனகராஜ் நடந்த விபரத்தை தனது வீட்டில் தெரிவித்தார். பணம் மற்றும் நகைக்காக சிலரிடம் கடன் கேட்டார். இதனிடையே 40 நாட்கள் மாணவியை அடைத்து வைத்து செக்ஸ் அனுபவித்த அய்யனார் பணம், நகை கிடைக்காததால் ராதாவை அடித்து அவரது வீட்டிற்கே அனுப்பி வைத்துவிட்டார்.

இளம் வயதில் தனது வாழ்க்கையை பறிகொடுத்து கண்ணீருடன் தனது தந்தையிடம் முறையிட்டார். இதுகுறித்து கனகராஜ் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அய்யனார், அவருக்கு அடைக்கலம் கொடுத்த கல்யாணராமன், இவரது மனைவி கலா, தமிழ்ச்செல்வி ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேட்டையில் பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு!!
Next post மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!