குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை மர்ம சாவு!!
குடியாத்தம் அரசு அஸ்பத்திரியில் இன்று அதிகாலை பெண் ஒருவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. 2.8 கிலோ எடையில் இருந்த அந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமாக பிறந்த குழந்தை சாவில் டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
குழந்தையின் தாய்க்கு ஏற்கனவே 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. அவரது கணவர் விவசாயி. குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்துள்ளனர்.
2–வதும் பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையை பெற்றோரே கொலை செய்திருக்கலாம் என்று டாக்டர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதுகுறித்து குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் அமுதாராணி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரோக்கியமாக பிறந்த குழந்தை 3 மணி நேரத்தில் இறந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating