வேதாரண்யம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு!!

Read Time:1 Minute, 27 Second

7245ae94-d72d-4caa-8354-4eb24cec8eba_S_secvpfவேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். விவசாயி. இவரது மகள் சுலோச்சனா(வயது 20). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். ஆயக்காரன்புலம் முதலியார்குத்தகையைச் சேர்ந்தவர் ரெத்தினம். இவரது மகன் குகன்(21). சென்னை தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

சுலோச்சனாவை கடந்த 2 ஆண்டாக குகன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி சுலோச்சனாவுடன் குகன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சுலோச்சனா கர்ப்பமடைந்ததும் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.

இதுகுறித்து வாய்மேடு போலீசில் சுலோச்சனா புகார் செய்தார். வேதாரண்யம் டி.எஸ்.பி. சார்லஸ் உத்திரவின் பேரில் வாய்மேடு சப்–இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குகனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிப்பழக்கத்தை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை!!
Next post பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்!!