கோழி இறைச்சிக்கு பணம் கேட்ட கடைக்காரருக்கு கொலை மிரட்டல்!!
Read Time:56 Second
நெகமத்தை அடுத்த காளியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது43). இவர் நெகமம் நால்ரோட்டில் கோழி இறைச்சிக் கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று இவரது கடைக்கு ரங்கம்புதூரைச் சேர்ந்த பிரபாகரன் (21) என்பவர் கோழி இறைச்சி வாங்க வந்தார். 1கிலோ இறைச்சி வாங்கிய அவரிடம் தனபால் பணம் கேட்டார்.
ஆனால் பணம் தராமல் தகராறில் ஈடுபட்ட பிரபாகரன் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து தனபால் நெகமம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தார்.
Average Rating