குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது!!

Read Time:3 Minute, 39 Second

c71cbad2-dd7c-464b-86a3-4b6441b79ef7_S_secvpfகுடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் ஊராட்சி பெரியதம்பியூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன் (வயது32), விவசாயி. அவரது மனைவி அம்பிகா(26). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அம்பிகாவிற்கு பிரசவ வலி ஏற்படவே உறவினர்கள் அவரை நேற்று அதிகாலை 2 மணி அளவில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அம்பிகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனளர். அதிகாலை 4.30 மணி அளவில் அம்பிகாவிற்கு பெண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் 2 கிலோ 800 கிராம் எடை அளவில் பிறந்தது.

சுமார் காலை 6.15 மணி அளவில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்களிடம் அம்பிகாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமாக பிறந்த குழந்தை 2 மணி நேரத்தில் இறந்த சம்பவம் டாக்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதையடுத்து இந்த தகவல் மருத்துவமனை மருத்துவ அலுவலர் அமுதாமணிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து சென்று மருத்துவமனையில் பிரசவம் பார்த்த டாக்டர் மற்றும் அம்பிகா, அவரது உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

அதன்பின்னர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக மருத்துவ அலுவலர் அமுதாமணி குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதையடுத்து குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சாந்தி உள்ளிட்டோர் மருத்துவமனையில் அம்பிகா, அவரது கணவர் தனஞ்செயன், அம்பிகாவின் தாயார் சகுந்தலா, தந்தை மணி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை பெண் ஒருவர் அமுக்கியது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் குழந்தையை அம்பிகாவின் தாயார் சகுந்தலா(55) அமுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதில் குழந்தையின் மார்பு நொறுங்கியுள்ளது.

இதை தொடர்ந்து சகுந்தலாவை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே தனது மகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் வறுமையில் உள்ளார். மேலும் ஒரு பெண் குழந்தையுடன் மகள் கஷ்டபட கூடாது என்பதற்காக குழந்தையை கொன்றதாக சகுந்தலா தெரிவித்துள்ளார். போலீசார் குழந்தையின் பாட்டி சகுந்தலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாலிவுட் பட வாய்ப்பு: நயன்தாரா, அனுஷ்கா போட்டி?
Next post திட்டக்குடி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மேலும் 8 பேர் கைது!!