இன்று பிறந்த நாள்: மேலும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்தார்!!

Read Time:2 Minute, 53 Second

09dda796-564f-4410-ac7d-b3b2c8d8b941_S_secvpfநடிகை ஹன்சிகா தனது பிறந்த நாளையொட்டி இன்று மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு எல்லாவற்றையும் அவரே கவனித்து கொள்கிறார்.

இதற்காக மாதம் தோறும் பெரிய தொகை செலவு செய்கிறார். இன்று ஹன்சிகாவின் பிறந்த நாள் ஆகும். ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் பவர் தெலுங்கு படத்தில் கடந்த சில நாட்களாக நடித்துக் கொண்டிருந்த அவர் இன்று காலை படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு விமானம் மூலம் மும்பை சென்றார். அங்கு 5 குழந்தைகளை தத்தெடுத்தார். இதற்கான தஸ்தாவேஜுகளில் கையெழுத்திட்டு அதிகாரிகளிடம் கொடுத்தார்.

பிறகு தத்தெடுத்த குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றார். ஏற்கனவே தத்தெடுத்த குழந்தைகளையும் சேர்த்து எண்ணிக்கை 30 ஆனது. இக் குழந்தைகள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். குழந்தைகளுக்கு கேக்கும் ஊட்டி விட்டார். வீட்டு அருகில் இருந்த விநாயகர் கோவிலுக்கும் சென்று சாமி கும்பிட்டார். ஆதரவற்ற முதியோர் இல்லம் ஒன்று கட்டுவதும் ஹன்சிகா லட்சியமாக இருக்கிறது. இதற்காக புது அறக்கட்டளை உருவாக்கி நிதி திரட்டி வருகிறார்.

ஹன்சிகாவுக்கு ஒவியம் வரைய தெரியும். சிறு வயதில் இருந்தே ஓவியங்கள் வரைந்து வீட்டில் குவித்து வைத்துள்ளார். அந்த ஓவியங்களை வைத்து கண் காட்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். சமீபத்தில் வரைந்த ராதா கிருஷ்ணர் ஒவியம் ஒன்றை நண்பர் ஒருவர் ரூ.15 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். ஹன்சிகா தமிழில் தற்போது ஆர்யா ஜோடியாக மிகாமன், ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜுலியட், சிம்புவுடன் வாலு படங்களில் நடித்து வருகிறார். விஷாலுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊடகங்களை கண்டு ஓடி ஒழியும் அனன்யா…!!
Next post திருமணத்துக்கு அவசரமா? லட்சுமி மேனன் நறுக்!!