பெண்கள் போகப்பொருள் அல்ல ரம்யா நம்பீசன் திடீர் ஆவேசம்!!

Read Time:1 Minute, 33 Second

Kollywood-news-9349பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகும்போது அதுபற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதை படித்தவர்கள் மட்டுமே கவனிக்கிறார்கள்.கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு அது சென்று சேர்வதில்லை. இதனை நான் ஷூட்டிங் சென்ற இடங்களில் நேரில் கேட்டறிந்தேன். கிராம புற மக்களுக்கும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அது மிகவும் முக்கியம். பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். பெண்கள் சுகம் தரும் போகப்பொருள் அல்ல. அடுத்த தலைமுறையாவது பெண்களை மதிக்க வேண்டும் என்று கோருகிறேன். இதை அனைத்து பெற்றோர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேதாரண்யம் அருகே திருமண ஆசைகாட்டி இளம்பெண் கற்பழிப்பு!!
Next post குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்!!