கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்த கணவன்!!
திண்டுக்கல், நாகல்நகர் பொன்சீனிவாச நகரை சேர்ந்தவர் சக்திவேலு. அவரது மனைவி அனுராதா(வயது 47). இவர்களுக்கு கடந்த 7–7–1996 ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை வழங்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதற்கு இடையில் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், சக்திவேலுவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த அனுராதா தட்டிக்கேட்டதால் வீட்டில் பிரச்சினை வெடித்தது. இதன் விளைவாக சக்திவேல், தனது மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு சித்ரவதை செய்தார்.
மனமுடைந்த அனுராதா தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சக்திவேலு மகேஸ்வரியை 2–வது திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த அனுராதா தனக்கு வழங்கப்பட்ட நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை தருமாறு சக்திவேலுவிடம் கேட்டார். இதனால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.
இதற்கு உடந்தையாக மகேஸ்வரி, உறவினர் ராமநாதன் ஆகியோர் உள்ளனர்.
இதுகுறித்துதிண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சக்திவேலு உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating