பெண்ணை குத்திகொன்று நகைகள் கொள்ளை: போலீசார் விசாரணை!!

Read Time:3 Minute, 39 Second

4969d1e8-5c50-4de7-8b30-bee84d64c28f_S_secvpfவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 45). இவரதுமனைவி சந்திரா (42). இவர்களுக்கு ராம் பாண்டி (20) என்ற மகன் உள்ளார்.

வரதராஜன் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் மானேஜராக வேலை பார்த்து வருகிறார். கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ராம் பாண்டி கோவாவில் உள்ளார்.

சந்திரா அங்குள்ள வீட்டில் மாடியில் தனிமையில் வசிந்து வந்தார். கீழ் வீட்டில் உறவினர் செல்லத்தாய் வசித்து வருகிறார். சந்திரா தனது வீட்டின் அருகில் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வந்தார்.

கோவாவில் தங்கியிருக்கும் ராம்பாண்டி தனது தயார் சந்திராவிடம் செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மகனுக்கு ரூ.25 ஆயிரம் அனுப்பினார்.

இன்று காலை11 மணி அளவில் ராம்பாண்டி தனது தாயாரிடம் செல்போனில் பேசமுயன்றார்.ஆனால் செல்போனில் ரிங் டோன் சென்று கொண்டே இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் கீழ் வீட்டில் தங்கிருக்கும் உறவினர் செல்லத்தாயிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். தனது தாயாரை போனில் பேசும்படி கூறினார்.

உடனே செல்லத்தாய் மாடியில் இருக்கும் சந்திரா வீட்டுக்கு சென்றார். அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டிப்பாத்தபோது அங்கு கட்டிலில் சந்திரா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உடம்பில் ரத்தம் வடிந்து இருந்தது.

உடனே அவர் இதுகுறித்து சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. முரளிதரன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

சந்திரா உடல் முழுவதும் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அதை பார்த்தபோது அங்கிருந்த 6 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. துணிமணிகள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன.

மர்ம ஆசாமிகள் யாரோ சந்திராவை கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். சந்திரா தனிமையில் இருப்பதை அறிந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாராவது ஈடுபட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்ணை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து தந்த வாலிபர் கைது!!
Next post சித்தார்த் – சமந்தா காதலில் விரிசலா?